கமலா ஜெயபாலன்

மதி
வெண்மதி வானில் வெண்முகி லோடும்
வியதகு மழகுடன் பாரில்
தண்ணொளி பரப்பித் தரணியும் குளிர
தந்திடும் தன்மையும் பாரீர்
பெண்ணெணப் போற்றும் பெருமையும் பெற்றாய்
பிள்ளைகள் பாட்டிலும் வாராய்
வண்ணமாய் யீசன் வளர்சடை மேலே
வதித்திடும் வசந்தமும் பாராய்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading