திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

கமலா ஜெயபாலன்

நடிப்பு
தன்னை மறந்து தந்திடும் நடிப்பு
தரமாய் வந்து தரணியில் கலந்தால்
பொன்னாய் வாழ்வில் பொலிந்து வளரும்
பொழுதுகள் எல்லாம் பொக்கிச மாகும்
உன்ன தமான யுயர்வும் கிட்டும்
உளமும் நினைத்தே ஊக்கம் கொள்ளும்
மன்னுர்க் கெல்லாம் மாட்சியைக் கொடுத்து
மலரும் பொழுதில் மகழ்வத் தருமே/

உள்ளத்தை யுருக்கி யுணர்வாக்கி நாளும்
உயர்வைத் தேடி யோடும் போதும்
கள்ளமில்லா கருத்துடன் கனிவைச் சேர்த்து
கலந்திடும் அன்பே காத்திடும் உறவை
பள்ளம் மேடு பார்த்து நடந்தால்
பண்பு வளரும் பாசம் பெருகும்
வெள்ளை மனதில் வேதனை அகலும்/

இருவகை நடுப்பு இதில்எது சிறப்பு
இரண்டும் வேண்டும் இதமாய் வாழ
கருத்தில் நடிப்பு காசு தருமே
காலத்தில் நடிப்பு கலகத்தில் முடியும்
விருட்சமாக வளரும் வாழ்வு வீரியம்பெறும்
வீட்டுக்கு வீடு விட்டால் நடிப்பை
இருந்து பார்ப்போம் இந்த வாழ்வை
எதுவும் நன்றே யியல்பு வாழ்வில்/

கமலா ஜெய்யாலன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading