“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

கலாதேவி பத்மநாதன்

சந்தம் சிந்தும் சந்திப்பு தலைப்பு –
இதய தெய்வம்
இல்ல கோயிலின்
இதய தெய்வம் சொல்லா துயரின் சோகத்தை தந்திட்டார்.

நடமாடிய தெய்வம்
நடைமறந்த தருணம் இடமறியா தடமாற இருள்சூழ்ந்த கோலம்

நோயின்றி நொடியின்றி நொடியினில் மரணம் வாயிருந்தும் வார்த்தையில்லை
வாயடைத்து நின்றோம்

கண்ணிமைக்கும் நேரத்திற்குள்
கண்ணீர் அஞ்சலி சம்பவம்
எண்ணத்தின் தாக்கத்தை
எழுதிவடிக்க ஏக்கமே

பாமக உறவுகள் பந்தலிட்டு ஆறுதல் பூமுக அகத்தினர் புனிதம் காத்தனர்

எல்லை தாண்டியே எண்ணற்ற உறவுகள் சொல்லிய ஆறுதல் சோகம் மறந்தன

நன்றி வணக்கம்🙏🏻🙏🏻🙏🏻

கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா

Nada Mohan
Author: Nada Mohan