பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

கலாதேவி பத்மநாதன்

சந்தம் சிந்தும் சந்திப்பு தலைப்பு –
இதய தெய்வம்
இல்ல கோயிலின்
இதய தெய்வம் சொல்லா துயரின் சோகத்தை தந்திட்டார்.

நடமாடிய தெய்வம்
நடைமறந்த தருணம் இடமறியா தடமாற இருள்சூழ்ந்த கோலம்

நோயின்றி நொடியின்றி நொடியினில் மரணம் வாயிருந்தும் வார்த்தையில்லை
வாயடைத்து நின்றோம்

கண்ணிமைக்கும் நேரத்திற்குள்
கண்ணீர் அஞ்சலி சம்பவம்
எண்ணத்தின் தாக்கத்தை
எழுதிவடிக்க ஏக்கமே

பாமக உறவுகள் பந்தலிட்டு ஆறுதல் பூமுக அகத்தினர் புனிதம் காத்தனர்

எல்லை தாண்டியே எண்ணற்ற உறவுகள் சொல்லிய ஆறுதல் சோகம் மறந்தன

நன்றி வணக்கம்🙏🏻🙏🏻🙏🏻

கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading