மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

“கல்லறைகள் திறக்கும் “

சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி இல_ 211

“கல்லறை திறக்கும் ”

கல்லறை பூக்கள்
காவிய நாயகர்கள்
காரிருளை அகற்றிய
கார்த்திகை மைந்தர்கள்!

மண்ணுக்கு
விதையாகி
முத்தாகி சொத்தாகிய
சொந்தங்கள்
கல்லறை திறக்கும்!

கல்லறைகள்
கதை சொல்லும்
காவியநாயகர் எழுவார்கள்
நெஞ்சமதில்
நினைவாக
நித்தம் நித்தம் ஏங்குகின்றோம்!

கல்லறை
திறந்து
கதை சொல்லிடும்
ஏக்கத்தில் எதிரியானவன்
விதைக்கப்பட்ட கல்லறைகள்
அழிக்கப்பட்டன!

மண்ணுக்காக மடிந்தீர்கள்
மக்களுக்காக உயிர் நீத்தீர்கள்
நீங்காத நினைவில்!

நாம் வருவோம்
நீங்கள் எழுவீர்கள் எங்கே எங்கே
ஒரு முறை உங்கள் திருமுகம் காட்டி
மறுபடி உறங்குங்கள் !

நன்றியுடன் 🙏

Author:

செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading