காலத்தை உணர்ந்திடு

சிவருபன் சர்வேஸ்வரி

காலத்தை உணர்ந்திடு

கருத்தோடு மொழியைப் பகிர்ந்திடும் வேளையில்//
நல்லவளத்தோடு வாழ்வின் நயங்களும் புரியும் //
நல்நிலையோடு மனிதன் வளமேகிடல் என்றும் //
வரமுறையாய்க் கொண்டு வருவதும் சான்று //

தரமோடு செயலும் சிறக்கவில்லை என்றால் //
சீரழிவோடு பயணம் நடைப்பிணம் ஆகும் //

நற்குணத்தோடு இணங்கிடும் நன்னெறியும் கண்டே //
தற்பெருமை கொள்ளாத அகமும் பேணுதல்முறையே //

கற்பகதருவின் கருணையினாலே எத்தனை சேவைகள் //
அத்தனையும் புரிந்திடும் போதினிலே கேளாய் //
அருள்கொடையும் உன்னுடன் சேருமே பண்பாகவே //

தர்மமே தன்மானமே தளராத நோக்கமே //
கர்வமே கொள்ளாதே காலத்தை உணர்ந்திடு //

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

Continue reading