” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கீத்தாபரமானந்தன்

சந்தம் சிந்தும் சந்திப்பு!
உயிர்க்கொடை!

ஊருக்காய் உறவுக்காய்
உருகிய மெழுகுகள்!
பேர்சொல்லி வாழ்வதற்காய்
பிரிந்திட்டார் ஆவியினை!
தமிழன்னை பெற்றெடுத்த
தடந்தோள் வீரர்கள்!
மண்காக்க மானங்காக்க
தன்மானம் கொண்டெழுந்த
தற்கொடை ஆளர்கள்!
இன்னலில் எங்களின்
இரும்புக் கவசமவர்!

கண்மூடி நாம்தூங்கக்
காட்டிலும் கடலிலும்
காற்றாய் அலைந்தே
காவியம் வடித்தவர்கள்!
மாற்றீடே இல்லாத
மாசற்ற தங்கமவர்!
இலட்சியம் ஒன்றே
இலக்காய் வரித்து
உயிர்க்கொடை தந்தவர்கள்!
கார்த்திகை நாயகர்!
காந்தளின் நேசர்களைப்
பூத்தூவி வணங்கிடுவோம்!

கீத்தா பரமானந்தன்
25-11-24

Nada Mohan
Author: Nada Mohan