ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

கீத்தா பரமானந்தன்

உழைப்பாளி

நித்திய வறுமைக்குள் சுற்றிடும் பம்பரமாய்/
நெற்றி வியர்வையை முத்தாக மாற்றி/
சுற்றம் நிமிர்ந்திட சத்தமின்றித் தேய்ந்து/
உக்கி உரமாகி உழன்றிடும் சேவகன்/

தேசத்தை நிமிர்த்தும் பெயரறியாத் தூணாய்/
நேசமாய்த் தொடரும் வேசமற்ற கடிகாரம்/
ஒட்டிய வயிறே நித்திய சொந்தமாய்/
செக்குமாட்டு உழைப்பில் தேயும் உருவாகி/

சோர்வறியா உடலோடு சுகமறியா வாழ்வின்/
வேதனைக் கணங்களின் நித்திய போராளியாய்/
வென்றிடும் முனைப்பில் நின்றிடுவான் நிமிர்வாய்/
விடியலைக் காணா ஒளியாய் உழைப்பாளி //

கீத்தா பரமானந்தன்
10-05-22

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

    Continue reading