மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

கீத்தா பரமானந்தன்

உழைப்பாளி

நித்திய வறுமைக்குள் சுற்றிடும் பம்பரமாய்/
நெற்றி வியர்வையை முத்தாக மாற்றி/
சுற்றம் நிமிர்ந்திட சத்தமின்றித் தேய்ந்து/
உக்கி உரமாகி உழன்றிடும் சேவகன்/

தேசத்தை நிமிர்த்தும் பெயரறியாத் தூணாய்/
நேசமாய்த் தொடரும் வேசமற்ற கடிகாரம்/
ஒட்டிய வயிறே நித்திய சொந்தமாய்/
செக்குமாட்டு உழைப்பில் தேயும் உருவாகி/

சோர்வறியா உடலோடு சுகமறியா வாழ்வின்/
வேதனைக் கணங்களின் நித்திய போராளியாய்/
வென்றிடும் முனைப்பில் நின்றிடுவான் நிமிர்வாய்/
விடியலைக் காணா ஒளியாய் உழைப்பாளி //

கீத்தா பரமானந்தன்
10-05-22

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading