புனித ரமலானே

புனித ரமலானே வஜிதா முஹம்மட் மறையை வழங்கிய மாதம்நீ மனிதம் சிறக்கும் ஈகையின் மாதம்நீ அ௫ளைப் பொழியும் மாதம்நீ அகிலமாழும் இறை...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
வசந்தம்
———-
வசந்தம் வாழ்க்கையின் வரம்
வருமா அதுவும் தினம்
வசந்த காலத்தென்றல
அள்ளி வழங்கும் முன்றல்
பருவகாலங்களில் வசந்தம்
பற்றியே நிற்கும் உணர்வும்
இருதுருவ இணைவு இயற்கை
நடப்பது வெறும் கனவு
இப்போது வசந்தம் வந்துவிட்டது
மரங்கள் செழித்து பச்சயமாக
காட்சியளிக்கிறது
மக்கள் சுறுசுறுப்பாக இயங்குகிறார்கள்
ஐந்தறி வும் ஆரவாரத்துடன்
திரிகுன்றன
பூத்துக் குலுங்கும் வசந்தம்
புதுப் பொலிவைத் தரட்டும்
மக்களும் அதை ரசிக்கட்டும்!
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan