” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

“ மொழி”

முத்துப் பவழமே முக்கனித் தேனமுதே
சொத்தாய் மலர்ந்துமே சோதியாய் தோன்றுவாய்
நித்தமும் என்நாவில் நின்றுமே
தித்திக்க எம்தமிழைத் தந்து

மாண்புடைத் தாய்மொழியே மங்காத தேன்மொழியே
காண்கின்ற நாடெல்லாம் காதினிக்கப் பேசுகின்றார்
தோண்டச் சீறிடும் தண்ணீரைப் போன்றிடவே
வேண்டுகிறேன் விண்ணுயர வீறு

குன்றி லிருக்கின்ற கண்மணி நீயம்மா
என்றும் எமக்குமே ஏணியாய் நின்றுமே
இன்பமாய்க் கற்க இனித்திடத் தந்துமே
மன்றில் மலரும் மொழி.

கோசலா ஞானம்.

Nada Mohan
Author: Nada Mohan