மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

“ மொழி”

முத்துப் பவழமே முக்கனித் தேனமுதே
சொத்தாய் மலர்ந்துமே சோதியாய் தோன்றுவாய்
நித்தமும் என்நாவில் நின்றுமே
தித்திக்க எம்தமிழைத் தந்து

மாண்புடைத் தாய்மொழியே மங்காத தேன்மொழியே
காண்கின்ற நாடெல்லாம் காதினிக்கப் பேசுகின்றார்
தோண்டச் சீறிடும் தண்ணீரைப் போன்றிடவே
வேண்டுகிறேன் விண்ணுயர வீறு

குன்றி லிருக்கின்ற கண்மணி நீயம்மா
என்றும் எமக்குமே ஏணியாய் நின்றுமே
இன்பமாய்க் கற்க இனித்திடத் தந்துமே
மன்றில் மலரும் மொழி.

கோசலா ஞானம்.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading