க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம்241
தீப ஓளியே

அவன் முகம் பார்க்கிறேன்
அவன் சிரிப்பை பார்க்கிறேன்
மௌனங்களை தரிக்கின்றேன்
கோபங்களை எதிர்கொள்கின்றேன்

எனக்கு மட்டுமே
தெரிகின்ற அந்த
தீப ஓளியில்
எத்தனை குமுறல்கள்!

விரும்பாத பிரிவும்
பிரியங்களின் ஏக்கங்களும்
ஆசைகளின் தாபங்களும்
அன்பின் வெளிப்பாடும்

கூரிய சுடரில்!
குத்தும் வேல்களாக
ஆறாமல் பார்க்கின்றேன்
அது சுடும் கனங்களில்!

ஏற்றவும் விருப்பமில்லை
அனைக்கவும் மனமில்லை
பார்க்கின்றேன் ஓளியை
பார்வைகள் பனிக்கும் வரை !….,

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

    Continue reading