சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம்241
தீப ஓளியே

அவன் முகம் பார்க்கிறேன்
அவன் சிரிப்பை பார்க்கிறேன்
மௌனங்களை தரிக்கின்றேன்
கோபங்களை எதிர்கொள்கின்றேன்

எனக்கு மட்டுமே
தெரிகின்ற அந்த
தீப ஓளியில்
எத்தனை குமுறல்கள்!

விரும்பாத பிரிவும்
பிரியங்களின் ஏக்கங்களும்
ஆசைகளின் தாபங்களும்
அன்பின் வெளிப்பாடும்

கூரிய சுடரில்!
குத்தும் வேல்களாக
ஆறாமல் பார்க்கின்றேன்
அது சுடும் கனங்களில்!

ஏற்றவும் விருப்பமில்லை
அனைக்கவும் மனமில்லை
பார்க்கின்றேன் ஓளியை
பார்வைகள் பனிக்கும் வரை !….,

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan