திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம்241
தீப ஓளியே

அவன் முகம் பார்க்கிறேன்
அவன் சிரிப்பை பார்க்கிறேன்
மௌனங்களை தரிக்கின்றேன்
கோபங்களை எதிர்கொள்கின்றேன்

எனக்கு மட்டுமே
தெரிகின்ற அந்த
தீப ஓளியில்
எத்தனை குமுறல்கள்!

விரும்பாத பிரிவும்
பிரியங்களின் ஏக்கங்களும்
ஆசைகளின் தாபங்களும்
அன்பின் வெளிப்பாடும்

கூரிய சுடரில்!
குத்தும் வேல்களாக
ஆறாமல் பார்க்கின்றேன்
அது சுடும் கனங்களில்!

ஏற்றவும் விருப்பமில்லை
அனைக்கவும் மனமில்லை
பார்க்கின்றேன் ஓளியை
பார்வைகள் பனிக்கும் வரை !….,

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading