க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம் 83

யுத்தம்

ஆக்கம் ஒன்றுக்கு
ஆகும் நாழிகை
அழிப்பதற்கு ஐந்து
நிமிடங்கள் போதுமே!

ஏற்கும் கோபம்
இடையில் போகும்
இழந்தவை மீட்பது
இயலாத காரியமே!

தெளிந்த சிந்தனை
தேசத்தை ஆளும்
ஆசையின் மோகம்
அவலத்தை தேடிடுமே!

வேல் கொண்டவன்
வேலால் மாண்டான்
மன தாழ்ச்சி பெற்றவன்
உயர்ச்சி பெறுவான் !

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading