க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 225

ஆறுமோ ஆவல்

ஆவல்
வார்த்தைகள் அற்றது
மனதுக்குள் திளைப்பது
ஏக்கங்களின் பெருமூச்சுகள்
எண்ணத்துடன் வெளிவருவது

எண்ணங்களின் தூண்டல்கள்
எழுந்திடும் ஆசைகள்
எண்ணுபவை நிரைவேற
ஏற்றமுள்ள எதிர்காலங்கள்

வதைத்திடும். தவிப்புக்கள்
வாஞ்சை தரும் காத்திருப்புகள்
அவனவனின் கற்பனையிலே
அவதரிக்கும் உருவகிப்புகள்

சிந்திடும் கண்ணீரும்
சினந்திடும். வெறுப்புகளும்
புரிவது இல்லை
புவிக்கு பொறுத்திட்ட
ஆவல் என்று !!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading