” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 225

ஆறுமோ ஆவல்

ஆவல்
வார்த்தைகள் அற்றது
மனதுக்குள் திளைப்பது
ஏக்கங்களின் பெருமூச்சுகள்
எண்ணத்துடன் வெளிவருவது

எண்ணங்களின் தூண்டல்கள்
எழுந்திடும் ஆசைகள்
எண்ணுபவை நிரைவேற
ஏற்றமுள்ள எதிர்காலங்கள்

வதைத்திடும். தவிப்புக்கள்
வாஞ்சை தரும் காத்திருப்புகள்
அவனவனின் கற்பனையிலே
அவதரிக்கும் உருவகிப்புகள்

சிந்திடும் கண்ணீரும்
சினந்திடும். வெறுப்புகளும்
புரிவது இல்லை
புவிக்கு பொறுத்திட்ட
ஆவல் என்று !!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan