கொழுத்தும் வெம்மை

வியாழன் கவி -2357 “கொழுத்தும் வெம்மை” ஐரோப்பா எங்கிலும் அதீத வெப்பத்தின் மிரட்சி அந்தோ பரிதாபம் புழுவாய்த் துடிக்கும் மனிதம் அப்பப்போ...

Continue reading

சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 288. அதோ !
அந்த வானத்தின்
அந்தத்திலே செந்நிறமாய் !
மறைந்து கொண்டே ஆதவன் . . .

இதோ
இந்த முற்றத்தின் 
இதயத்தில் இருளாய்த்
தவழ்ந்திடும் இரவு . . .

ஏதோ
எழுந்த கனவுகளில்
எழுதாத ஓவியமாய்
என்னென்னவோ சித்திரங்கள் . . .

தீதோ
தீண்டாத நினைவுகள்
தீயினைப் போலவே
தீய்க்குது நெஞ்சத்தின் உணர்வுகளை . . .

சூதோ
சூழ்ந்த சொந்தங்கள்
சூழ்ச்சியின் விளைநிலமாய் தீட்டிடும்
சூட்சுமத் தந்திரங்கள் . . .

மீதோ
மீண்டிருக்கும் காலத்தில்
மீட்டிடும் கானங்கள் எல்லாம்
மெளனமாய் இதயத்தினுள் புதைந்திடும் . . .

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading