கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

சக்தி சக்திதாசன்

காலையும் விடிந்தது
கதிரவன் ஒளிர்ந்தது
கடமைகள் முடித்திட
காலம் பிறந்தது

துடித்திடும் உள்ளங்கள்
துவண்டிடும் பொழுதுகள்
தூக்கத்தில் விழிப்புகள்
துயரத்தின் சாயல்கள்

புதுப்புது வரவுகள்
பிரிந்திடும் உறவுகள்
பற்பல உணர்வுகள்
பாரினில் தினந்தினம்

பிறப்பதும் இறப்பதும்
பூமியின் சாத்திரம்
அழுகையும் சிரிப்பும்
அவனியின் அணிகலன்

இருப்பவர் என்றுமே
இங்கு நிலைப்பதில்லை
இருந்திடும் போதவரீந்த
இனியகணங்கள் மறைவதில்லை

காலங்கள் கடந்திடும்போது
கசந்திட்ட கணங்கள்யாவும்
கரைந்திடுமெனும் சத்தியம்
காற்றினில் தவழ்ந்திடுமே

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் செல்லாக்காசு புவனத்தில் பலநாட்டின் நாணய மதிப்பு புழங்கிடும் பல்வேறு நாமத்தின் சிறப்பு பலநாட்டின் பணத்தால் பாரிய விரிசல் பதுக்கிய...

    Continue reading