19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
சக்தி சக்திதாசன்
விடைகளைத் தேடி ஓடும்
வினாக்களின் பயணமிது
முடிவுகளின் மீது நடமிடும்
முடியாத புதிய கீதமிது
எமக்கென்று இங்கே கொடுத்த
எதுவுமில்லை எனும் உண்மை
புரிகின்ற் பொழுதொன்று புலர்ந்திடும்
புதிதான சித்தாந்தம் பூத்திடும் பொழுது
சரியென்று நினத்து நடக்கையில் அது
சரிந்திடும் வேளைகள் புலர்த்திடும்
பொதுவான கருத்துக்கள் மிதந்திடும்
பொன்னான வேளையொன்றின் வேலை
தேடித்தேடி அனைவரும் ஓடியோடி
தேடல்களிந் வழி வகுத்தபாதை
மூடியமுட்களின் மீதெனிலும் ஏனோ
முடியாத ஏக்கங்களின் ஓலங்கள்
போகட்டும் என்றே ஒதுக்கிட்ட போதும்
போதாது, போதாது என்றே போராட்டம்
போயும் , போயும் மானிடராய் நாமும்
பிறந்திட்ட வேளைதனின் கோலம் தானோ?
சக்தி சக்திதாசன்
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...