மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

சக்தி சக்திதாசன்

விடைகளைத் தேடி ஓடும்
வினாக்களின் பயணமிது
முடிவுகளின் மீது நடமிடும்
முடியாத புதிய கீதமிது

எமக்கென்று இங்கே கொடுத்த
எதுவுமில்லை எனும் உண்மை
புரிகின்ற் பொழுதொன்று புலர்ந்திடும்
புதிதான சித்தாந்தம் பூத்திடும் பொழுது

சரியென்று நினத்து நடக்கையில் அது
சரிந்திடும் வேளைகள் புலர்த்திடும்
பொதுவான கருத்துக்கள் மிதந்திடும்
பொன்னான வேளையொன்றின் வேலை

தேடித்தேடி அனைவரும் ஓடியோடி
தேடல்களிந் வழி வகுத்தபாதை
மூடியமுட்களின் மீதெனிலும் ஏனோ
முடியாத ஏக்கங்களின் ஓலங்கள்

போகட்டும் என்றே ஒதுக்கிட்ட போதும்
போதாது, போதாது என்றே போராட்டம்
போயும் , போயும் மானிடராய் நாமும்
பிறந்திட்ட வேளைதனின் கோலம் தானோ?

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading