19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
சக்தி சக்திதாசன்
சற்றேனும் விலகாமல்
பற்றேதும் குறையாமல்
கற்றோதும் பண்புடன்
பெற்றோர்கள் வளர்ப்பார்கள்
முற்றேதும் கிடையாது
அற்றேகும் காலத்தும்
ஊற்றாகும் அன்புடன்
ஈற்றுவரை காப்பார்கள்
போற்றுதல் வேண்டாமல்
பற்றுதல் கொண்டெமை
கற்றோர்கள் சபையிலே
நிற்றேக வைத்திடுவார்
நற்றோதும் பண்புடன்
சுற்றோர்கள் வாழ்த்திட
சிற்றேதும் சலிப்பில்லா
வற்றாமல் அன்புசெய்வர்
சீற்றம்கொள்ளா பொறுமை
ஏற்றம்வேண்டா அருஞ்சேவை
மாற்றமில்லா அன்புமழை
பெற்றோரின் பெருங்குணமே !
குற்றமற்ற உள்ளம்கொண்டு
ஈற்றுவரை அவரைக்காத்து
போற்றியாம் பேணிநாளும்
ஏற்றிடுவோம் பெற்றோரையே !
சக்தி சக்திதாசன்
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...