26
Jun
ஜெயம் தங்கராஜா
சுகதுக்கங்களோடு ஒரு மண்ணுலகப் பயணம்
நாளும் கற்கும் அனுபவங்களாலோ பயனும்
ஆயுளுக்குமான...
26
Jun
அதிகரிக்கும் வெப்பம்
நகுலா சிவநாதன்
அதிகரிக்கும் வெப்பம்
கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு
வாடை குறையும் வசந்தப்பொழுதாய்
வேளைதோறும் வெப்ப விடியல்
வேண்டும்...
26
Jun
“காலம் போற போக்கைப் பாரு”
நேவிஸ் பிலிப் கவி இல(461)
காலங்களில் வசந்தமாய்
அடர்ந்த காடு உயர்ந்த மலை
சலசலக்கும் நீரோடை
வெள்ளிக்...
சக்தி சக்திதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு -262- “நேரம்”கவிதையில் எழுவேன்
கவிதையில் வாழ்வேன்
கவிதையாய் மலர்வேன்
கவிதையுள் உறைவேன்
எனக்குள் கவிதைகள்
எப்படி விளைகின்றன ?
எனக்குள் தமிழை
எவர்தான் விதைத்தார் ?
தீராத கேள்விகளும்
கிடைக்காத விடைகளும்
இருந்திடும் மனதினுள்
இனித்திடும் கவிதைகள்
சமூகத்தின் நிகழ்வுகள்
சத்தமாய்க் கவிந்திடும்
சரித்திர நிகழ்வுகள்
வரிகளாய் முகிழ்த்திடும்
பார்வையின் கோணத்தில்
பதிவதெல்லாம் கவிதைகள்
பார்ப்பதும் கேட்பதும்
புரிந்திடும் கவிதைகளாய்
வரலாற்று நாயகர்கள்
வடிவங்கள் கவிதைகளாய்
உணர்வின் பிரவாகம்
ஊறிடும் கவிதைகளாய்
இருப்பினும் கவிஞனல்ல
இயற்றுவது கவிதையுமல்ல
தானாய் விளையுது
தமிழாய்த் தவழுது
சக்தி சக்திதாசன்

Author: Nada Mohan
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...
26
Jun
ஜெயம்
உலகம் அழகினை தேக்கிய கோளம்
கலகமோ நுழைந்தின்று அழிந்திடும் கோலம்
நீயா நானாவென நாடுகளுள்...
24
Jun
வசந்தா ஜெகதீசன்
செல்லாக்காசு..
வரம்பில் நில்லா நீர் போல
வரைமுறையற்ற செயல் போல
உலகை யாளும் பணத்தையும்...