புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு -262- “நேரம்”கவிதையில் எழுவேன்
கவிதையில் வாழ்வேன்
கவிதையாய் மலர்வேன்
கவிதையுள் உறைவேன்

எனக்குள் கவிதைகள்
எப்படி விளைகின்றன ?
எனக்குள் தமிழை
எவர்தான் விதைத்தார் ?

தீராத கேள்விகளும்
கிடைக்காத விடைகளும்
இருந்திடும் மனதினுள்
இனித்திடும் கவிதைகள்

சமூகத்தின் நிகழ்வுகள்
சத்தமாய்க் கவிந்திடும்
சரித்திர நிகழ்வுகள்
வரிகளாய் முகிழ்த்திடும்

பார்வையின் கோணத்தில்
பதிவதெல்லாம் கவிதைகள்
பார்ப்பதும் கேட்பதும்
புரிந்திடும் கவிதைகளாய்

வரலாற்று நாயகர்கள்
வடிவங்கள் கவிதைகளாய்
உணர்வின் பிரவாகம்
ஊறிடும் கவிதைகளாய்

இருப்பினும் கவிஞனல்ல
இயற்றுவது கவிதையுமல்ல
தானாய் விளையுது
தமிழாய்த் தவழுது

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading