பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

சக்தி சங்கர்

இனிய இரவு வணக்கம்!
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித்தலைப்பு
பெண்ணே
**************
எண்சீர் விருத்தம்
———————————
சீர் வரையறை: காய் மா காய் மா/ காய் மா காய் மா

பாரதியின் கனவே பாரினிலே கண்ணே
பாசத்தின் ஊற்றே பாவையவள் தானே
வீரமுடன் நடந்து வீறுநடை போடு
விடுதலையை விரும்பு வீட்டினிலே முதலில்
சாரதியும் நீயே சாய்ந்திடாத குன்றே
சாதனைகள் புரிவாய் சங்கடங்கள் வரினும்
ஆரவாரம் இன்றி ஆளுமையை வளர்ப்பாய்
அகிலத்தை ஆள்வாய் ஆரணங்கே வாழ்க!
நயம்படவே உரைப்பாய் நல்லவளாய் வாழ்வாய்
நானிலத்தில் என்றும் நறுமணமும் வீசு
கயவர்கள் கொடுமை கண்டாலே பொங்கு
கற்பினையே காத்து கண்ணகியாய் மிளிர்வாய்
உயரத்தைத் தொடுவாய்
உந்துசக்தி ஆவாய்
உன்னாலே தானே உருவான துலகம்
புயலெனவே வீசிப் பூட்டினையே உடைப்பாய்
புதுமைகளைப் படைப்பாய் புதுயுகமும் காண்பாய்!
ப.வை.அண்ணா! உங்கள் பணி பாரிய பணி. மிகுந்த வாழ்த்துகள்!
கூட இருந்து ஆய்வு செய்யும் மதிமகன் அவர்கட்கும் மிக்க நன்றி!
திரு.திருமதி நடா மோகன் அவர்கட்கும்
மிகுந்த நன்றி!
நன்றி வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading