சக்தி சிறினிசங்கர்

உற்சாக வணக்கம்
திரு.நடா மோகன் அவர்களே!
திரு.ப.வை.ஜெயபாலன் அவர்களே!
மற்றும் பாமுக உறவுகளே!
சந்தம் சிந்தும் சந்திப்பு!
கவித்தலைப்பு
தொழிலாளி!
மனவலிமை கொண்டே மனையும் சிறக்கவே
கனத்த நெஞ்சுடனே கண்ணியமும் காத்து
வியர்வைத் துளிகள் வீழ்ந்து போக
உயர்வு நிலைக்கு உரமிடும் உழைப்பாளி
இயங்குவான் தன்வலிமை என்னும் எந்திரம்கொண்டே
பயன்பெறும் முதலாளி பணத்தில் குறிவைப்பான்
சுரண்டலும் இருக்கும் சூழ்ச்சியும் இருக்கும்
வரண்ட உடலோடு வாடிவதங்கும் தொழிலாளி
கரங்களைப் பார்க்க காய்ச்சே இருக்கும்
திரட்டவே ஆசை தினமும் ஆனாலும்
விரட்டுமே வறுமை விடியலும் எப்போ?
ஏக்கமும் கொண்டே ஏற்றம் காண
ஊக்கமுடன் உழைக்கும் உழைப்பாளி
காக்கும் கடவுளே!

பாரியபணி செய்யும் ப.வை.அண்ணா
மிகுந்த பாராட்டுகள்!
திரு.நடா மோகன் அவர்களே! மிகுந்த நன்றி !

நன்றி வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்_209 "பணி" செய்யும் தொழிலை செவ்வன செய் சேதாரம் ஊதாரம் சேவையுடன் செய்! கண்ணும் கருத்துமாய் கண்ணியமாய்...

    Continue reading

    ராணி சம்பந்தர் உயிரூட்டும் உருவங்கள் பயிரூட்ட நீர் ஊற்றியே வளர்த்திட்டது போலவே வாழ்வுப் போராட்டமதில் சாதித்திடவே பிறந்தோர் பணி செய்வதே தியாகம் பூரிப்பூட்டும்...

    Continue reading