13
Mar
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
வங்கக் கடலுக்குத் தாகம்
வானம் தொட ஆசையில்
பொங்கிப்...
13
Mar
கவிதையெனக் கிறுக்கினேன்(52)…
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-03-2025
ஈழமண்ணை இழந்த அப்பாவியாகி
இதயக்கிடக்கைகள் சில எழுத்தாகி
தொலைந்து போன கனவுகள்...
13
Mar
புனித ரமலானே
புனித ரமலானே
வஜிதா முஹம்மட்
மறையை வழங்கிய
மாதம்நீ
மனிதம் சிறக்கும் ஈகையின் மாதம்நீ
அ௫ளைப் பொழியும் மாதம்நீ
அகிலமாழும் இறை...
சக்தி சிறினிசங்கர்
இனிய இரவு வணக்கம்
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித்தலைப்பு
நடிப்பு
*******
அன்பினைக் காட்டுவர்
அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு
உள்ளத்திலே கசப்பு
நாவிலே அன்பு
நழுவிடுமே பின்பு
முகத்திலே வெளிச்சம்
அகத்திலே இருள்
பகர்ந்திடும் பாசம்
கலைந்திடும் வேசம்
உடையிலே உத்தமர்
நடையிலே துரோகிகள்
கபடம் இல்லையென்பர்
கசடை நெஞ்சினில் புதைப்பர்
பேசுவது உண்மையென்பர்
பூசுவது பொய்மை முலாம்
பழிபாவம் சுமக்கிறோமென்பர்
குழியினுள் தள்ளவும் தயங்கார்
காதலைக் கண்ணில் வைப்பர்
கல்யாணம் என்றால்
மண்அள்ளிப் போடுவர்
பார்த்தால் பசு போன்றிருப்பர்
வார்த்தையில் வாலை ஆட்டுவர்
வாஞ்சை காட்டி நடிப்பர்
வஞ்சம் கொண்ட வக்கிரப்போக்கர்
உலகமோ இருட்டு
வலம்வரும் திருட்டு
முகங்களோ அதிகம்
நகர்ந்திட நாமும்
நடிக்கவே வேண்டும்
நல்லவர்க்கு நல்லவராய்க்
கெட்டவர்க்குக் கெட்டவராய்!
நன்றி வணக்கம்!

Author: Nada Mohan
14
Mar
நேசிகக்க வைத்த நிகழ்வு
யோசிக்க வைத்த தரவு
சொல்தேடி எடுத்த கவிப்பு
சொந்தங்கள் த௫ம் குவிப்பு
ரசிந்து...
14
Mar
அகவை மூன்னூறு வாரம்
என்பது
அகமகிழ்வை
...
13
Mar
மனோகரி ஜெகதீஸ்வரன்
சந்தம் சிந்தும் சந்திப்பே - நீ
சிந்தும் சந்தம் தித்திப்பே
நீயணிந்திருப்பதோ கவியாரம்
அதுகொடுக்குது ஒய்யாரம்
அதனால்...