மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சக்தி சிறினிசங்கர்

உற்சாக வணக்கம்!
வியாழன் கவிதை
நிமிர்வின் சுவடுகள்!
அழகழகாய் விழுதுவிட்ட ஆலமரங்கள்
வழமான எம்வாழ்வின் வரப்பிரசாதங்கள் அவர்கள்
உளமாரப் போற்றுவோம் உத்தமர்கள் அவர்கள்
அளவாக ஆசைப்பட்டு ஆரோக்கியம் பேணியவர்கள்
தளர்வயதிலும் ஆளுமை தணியாது உழைத்தவர்கள்
விளக்குகளாய் இருந்து வெளிச்சம் தந்தவர்கள்
நிமிடம் கூட வீணாக்காது வாழ்ந்தவர்கள்
நிமிர்வின் சுவடுகளாய் நினைவில் இருப்பவர்கள்
எத்தனை எத்தனை ரத்தினங்கள்
இத்தரையில் வாழ்ந்த முன்னோர்கள்
கலங்கரை விளக்கைப் போல
கடமை செய்து
காலம் கடத்திய கண்மணிகள்
குலம் விளங்க நாளும் உழைத்து
பலம் குன்றி பருவம் மாறி
முதுகு வளைந்து முதுமை அடைந்த முத்துக்கள்
காலம் எல்லாம் கண்கலங்காது பாதுகாக்கவேண்டுமே நிமிர்வின் சுவடுகளை!

கவிதை நேரத் தொகுப்பாளினிகட்கு மிக்க நன்றியும் பாராட்டுகளும் உரித்தாகுக. திரு.திருமதி.நடா மோகன் அவர்களுக்கும் நன்றிகூறி அன்புடனும் நன்றியுடனும் விடைபெற்றுக்கொள்கிறேன்.
நன்றி வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading