” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சக்தி சிறினிசங்கர்

உற்சாக வணக்கம்!
வியாழன் கவிதை
நிமிர்வின் சுவடுகள்!
அழகழகாய் விழுதுவிட்ட ஆலமரங்கள்
வழமான எம்வாழ்வின் வரப்பிரசாதங்கள் அவர்கள்
உளமாரப் போற்றுவோம் உத்தமர்கள் அவர்கள்
அளவாக ஆசைப்பட்டு ஆரோக்கியம் பேணியவர்கள்
தளர்வயதிலும் ஆளுமை தணியாது உழைத்தவர்கள்
விளக்குகளாய் இருந்து வெளிச்சம் தந்தவர்கள்
நிமிடம் கூட வீணாக்காது வாழ்ந்தவர்கள்
நிமிர்வின் சுவடுகளாய் நினைவில் இருப்பவர்கள்
எத்தனை எத்தனை ரத்தினங்கள்
இத்தரையில் வாழ்ந்த முன்னோர்கள்
கலங்கரை விளக்கைப் போல
கடமை செய்து
காலம் கடத்திய கண்மணிகள்
குலம் விளங்க நாளும் உழைத்து
பலம் குன்றி பருவம் மாறி
முதுகு வளைந்து முதுமை அடைந்த முத்துக்கள்
காலம் எல்லாம் கண்கலங்காது பாதுகாக்கவேண்டுமே நிமிர்வின் சுவடுகளை!

கவிதை நேரத் தொகுப்பாளினிகட்கு மிக்க நன்றியும் பாராட்டுகளும் உரித்தாகுக. திரு.திருமதி.நடா மோகன் அவர்களுக்கும் நன்றிகூறி அன்புடனும் நன்றியுடனும் விடைபெற்றுக்கொள்கிறேன்.
நன்றி வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan