மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

சக்தி சிறினிசங்கர்

உற்சாக வணக்கம்!
வியாழன் கவிதை
நிமிர்வின் சுவடுகள்!
அழகழகாய் விழுதுவிட்ட ஆலமரங்கள்
வழமான எம்வாழ்வின் வரப்பிரசாதங்கள் அவர்கள்
உளமாரப் போற்றுவோம் உத்தமர்கள் அவர்கள்
அளவாக ஆசைப்பட்டு ஆரோக்கியம் பேணியவர்கள்
தளர்வயதிலும் ஆளுமை தணியாது உழைத்தவர்கள்
விளக்குகளாய் இருந்து வெளிச்சம் தந்தவர்கள்
நிமிடம் கூட வீணாக்காது வாழ்ந்தவர்கள்
நிமிர்வின் சுவடுகளாய் நினைவில் இருப்பவர்கள்
எத்தனை எத்தனை ரத்தினங்கள்
இத்தரையில் வாழ்ந்த முன்னோர்கள்
கலங்கரை விளக்கைப் போல
கடமை செய்து
காலம் கடத்திய கண்மணிகள்
குலம் விளங்க நாளும் உழைத்து
பலம் குன்றி பருவம் மாறி
முதுகு வளைந்து முதுமை அடைந்த முத்துக்கள்
காலம் எல்லாம் கண்கலங்காது பாதுகாக்கவேண்டுமே நிமிர்வின் சுவடுகளை!

கவிதை நேரத் தொகுப்பாளினிகட்கு மிக்க நன்றியும் பாராட்டுகளும் உரித்தாகுக. திரு.திருமதி.நடா மோகன் அவர்களுக்கும் நன்றிகூறி அன்புடனும் நன்றியுடனும் விடைபெற்றுக்கொள்கிறேன்.
நன்றி வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading