“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

சாமினி துவாரகன்

நடுத்தர வர்க்க பரிதாபங்கள்
—————————-

கடையில் அலங்கரிக்கப்பட்ட பொம்மைகள்……
ஒவ்வொரு வீட்டிலும்
வயசுக்கு வந்த
பெண்கள்……

பேரம் பேசவும்
வேடிக்கை பார்க்கவும்
ஒரு தொகை கூட்டம்…..
வெள்ளை நிறத் தோலும்
கை நிறைய
சீதனமும்
தேடும் ஓர்
கூட்டம்……

விற்பனையாகாமல்
நாளைய வேடிக்கைக்காக
கடையில்
அலங்கரிக்கப்பட்ட
பொம்மைகள் ….
பொண்ணு பார்க்கும்
படலம்
நாளும் தொடர்ந்த
வண்ணமாய்
ஒவ்வொரு
வீட்டிலும்
வயசுக்கு வந்த
பெண்கள்…….

-சாமினி துவாரகன்-

Nada Mohan
Author: Nada Mohan