“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

சித்திரையில் இத்தரையில்….

வசந்தா ஜெகதீசன்
செல்வத்தின் தோப்பழகில்
சித்திரையாள் மலர்ச்சி
சிவந்திருக்கும் வான் போல
சிலிர்கின்ற மகிழ்ச்சி
தமிழரின் புத்தாண்டாய் தரணிலே வருகை
தரும் மாற்றம் பலவாகி தொடருகின்ற உவகை
எழில்கோலம் அழகாகும்
எங்குமே பசுமை
உழைக்கும் கர உந்தலே
உலகிற்கு விருந்து
உயர்வு நோக்கி விடியலே வாவென்று அழைப்பு
கடிதெனவே கஸ்ரங்கள்
கரைந்தோடும் காலம்
சித்திரையாள் இத்தரையில்
செழித்திருக்கும் கோலம்
செல்வாக்காய் எங்குமே
சிரிப்பொலிகள் பேசும்
இருளகன்று ஒளிவெள்ளம்
இத்தரையில் பாயும்
விடியலின் அறைகூவல்
வெற்றியென முழங்கும்.

நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan