சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1834!

விழிப்புத் தேவை!

ஐ நா மன்றதனால்
அனைத்துக்கும்
ஒவ்வொரு நாள்
அகிலம் விழிக்க
அமைத்த சில நாள்
விழித்துக் கொள்ள
விடியல் காண
நிலைத்தது ஏட்டில்
நித்தம் நினைவில்…!

நொடிகள் கரைவது
விழிகளில் புலனாகா
மடியும் நாட்களும்
மனத்தினில் விலகா
எண்ணத்தில் கொள்வது
எமக்கே சிறப்பு
என்றும் விழிப்பே
மனித உயர்வு!

வருமுன் காப்பதும்
வந்தபின் எதிர்த்து நிற்பதும்
வீழ்ந்தால் எழுவதும்
விழிப்பினால் வருவதே!
சிவதர்சனி இராகவன்
28/6/2023

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading