சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1834!

விழிப்புத் தேவை!

ஐ நா மன்றதனால்
அனைத்துக்கும்
ஒவ்வொரு நாள்
அகிலம் விழிக்க
அமைத்த சில நாள்
விழித்துக் கொள்ள
விடியல் காண
நிலைத்தது ஏட்டில்
நித்தம் நினைவில்…!

நொடிகள் கரைவது
விழிகளில் புலனாகா
மடியும் நாட்களும்
மனத்தினில் விலகா
எண்ணத்தில் கொள்வது
எமக்கே சிறப்பு
என்றும் விழிப்பே
மனித உயர்வு!

வருமுன் காப்பதும்
வந்தபின் எதிர்த்து நிற்பதும்
வீழ்ந்தால் எழுவதும்
விழிப்பினால் வருவதே!
சிவதர்சனி இராகவன்
28/6/2023

Nada Mohan
Author: Nada Mohan