அறிவின் விருட்சம்

ராணி சம்பந்தர் விதையின் விருட்சம் என்றும் வாழ்வின் வெளிச்சம் இன்றும் பாதையின் உச்சம் புத்தகமே பூத்ததே மனதிலோ இனிமை சேர்த்ததே...

Continue reading

அறிவின் விருட்சம்

ஜெயம் தங்கராஜா அறிவுக்கு இதுவொரு விருந்து அறியாமையை நீக்கிடும் அருமருந்து புத்தியை எட்டவைக்கும் பெட்டகம் வாழ்க்கைக்கு கிடைத்த பொக்கிஷம் வாசித்தால்...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1858!

புற்றெடுக்கும் கொடு நோய்!

உள் நின்றே உயிர்குடிக்கும்
உருக்குலைக்கும் கொடுமை
வந்துவிட்டால் போக்குதற்கு
வழியின்றித் தவிக்கும் மனிதம்!
காரணங்கள் பலவுண்டு
கலங்கி நிற்கும் மருத்துவமும்
சவாலாகி நின்றுழலும் புவியில்
விடை தருமோ காத்திருப்போம்!
மதுவும் புகையும் மலிந்து
உட்புகும் படுக்கையில் தள்ளும்
பாவம் என்றே மற்றோரும்
இரங்கிடச் செய்யும்..!
வயது பேதமின்றி வந்துவிடும்
வலிகள் தந்துவிடும்- இதனை
ஒழித்திட தந்துவிடு மருத்துவம்
உலகே உன் பணி உயர்வே…
சிவதர்சனி இராகவன்
31/8/2023

Nada Mohan
Author: Nada Mohan