06
Jul
வர்ண வர்ணப் பூக்களே
வர்ண வர்ணப் பூக்களே
பசுமை நிறைந்தது நம்தேசம் பாரு
பலவர்ணங்கள் கொண்டதே மலர்த்தோட்டம் அழகு
கனியும் மனதில்...
வியாழன் கவிதை நேரம்!
சிவதர்சனி கவி 1642!
வல்லமை தாராயோ!
வல்லதமிழ் சொல்லினிலே வார்த்தெடுத்த கவியொன்று
மெல்ல இரு செவி சேர
வரமொன்று தாராயோ
புவிமீது தடம்பதித்து
புகழ்பூத்த பாதங்கள்
புதைந்த தொரு மணல்காடு
விதையாகி எழும் நாள்
விடியல் ஒன்று வாராதோ!
கருமேகப் பரப்பினிலே
கரைந்தெழுந்த வானவில்
வருமழையின் துளிபட்டு
வளைந்ததொரு கோலத்தில்
சிறு மானின் கூட்டத்தில்
சிதறுண்ட ஒரு மானாய்
சிந்திவிடும் நேரத்தில்
சிதறாதே நம் எண்ணங்கள்!!
சிவதர்சனி இராகவன்
15/6/2022
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.