சிவதர்சனி

வியாழன் கவிதை நேரம்!
சிவதர்சனி கவி 1642!

வல்லமை தாராயோ!
வல்லதமிழ் சொல்லினிலே வார்த்தெடுத்த கவியொன்று
மெல்ல இரு செவி சேர
வரமொன்று தாராயோ
புவிமீது தடம்பதித்து
புகழ்பூத்த பாதங்கள்
புதைந்த தொரு மணல்காடு
விதையாகி எழும் நாள்
விடியல் ஒன்று வாராதோ!

கருமேகப் பரப்பினிலே
கரைந்தெழுந்த வானவில்
வருமழையின் துளிபட்டு
வளைந்ததொரு கோலத்தில்
சிறு மானின் கூட்டத்தில்
சிதறுண்ட ஒரு மானாய்
சிந்திவிடும் நேரத்தில்
சிதறாதே நம் எண்ணங்கள்!!
சிவதர்சனி இராகவன்
15/6/2022

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading