” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவதர்சனி

வியாழன் கவிதை நேரம்!
சிவதர்சனி கவி 1642!

வல்லமை தாராயோ!
வல்லதமிழ் சொல்லினிலே வார்த்தெடுத்த கவியொன்று
மெல்ல இரு செவி சேர
வரமொன்று தாராயோ
புவிமீது தடம்பதித்து
புகழ்பூத்த பாதங்கள்
புதைந்த தொரு மணல்காடு
விதையாகி எழும் நாள்
விடியல் ஒன்று வாராதோ!

கருமேகப் பரப்பினிலே
கரைந்தெழுந்த வானவில்
வருமழையின் துளிபட்டு
வளைந்ததொரு கோலத்தில்
சிறு மானின் கூட்டத்தில்
சிதறுண்ட ஒரு மானாய்
சிந்திவிடும் நேரத்தில்
சிதறாதே நம் எண்ணங்கள்!!
சிவதர்சனி இராகவன்
15/6/2022

Nada Mohan
Author: Nada Mohan