மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

சிவதர்சனி

வியாழன் கவி 1666!

மன்னிப்பு !
தவறுகள் செய்யா மாந்தர் இனம்
தடம் பதித்த பூமி உண்டா
தவறுக்கு வருந்திக் கேட்கும்
மன்னிப்பை விட பேறேதும் உண்டா!

உணர்ந்து திருந்தி வாழும்
உயரிய மனங்களைக் கண்டு
உன்னதம் இதுவே என்று -நிதம்
மகிழ்வு கொள்ளுதல் உண்டே!

தண்டித்தல் என்பதை விடவும்
மன்னித்தல் உயர்வின் பண்பே
மீண்டும் செய்யாது திருத்த
வழியாய் அமையும் மருந்தே!

உலக மன்னிப்பு தினமும்
ஆகஷ்ட் ஐந்தில் அமைந்து
அகிலம் விழிக்க வென்றே
ஐ நா ஆக்கியது அன்றே!!
சிவதர்சனி இராகவன்
4/8/2022

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading