சிவமணி புவனேஸ்வரன்

சந்தம் சிந்தும் கவிக்காக
சிவமணி புவனேஸ்வரன் சுவிஸ் இல் இருந்து.

தலைப்பு : *நிச்சயதார்த்தம்*

ஒருமையாய் கூடி
ஒன்று பட்டே
இருமனதை இணைக்க
இணையும் உறவுகள்

பெருமனதாக உள்ளம் மகிழ
பருவங்கள் பார்த்து பலமும் சேர்த்து

விருந்துகள் ஆக்கி
விருப்புகள் சொல்லி
பொருந்தப் பேசும்
பொன்னான பொழுதே

தந்தை தாயை தலைமையாய் கொண்டு முந்தை பெரியார் முன்னிலை வைத்து

மங்கலப் பொருட்களை
மறுகரம் மாற்றி
திங்களும் குறித்து
தேதியும் ஆக்கி
சங்கம மாந்தர் சபையில் கூடி
நிச்சயம் ஒன்றே நிலையெனச் சொல்லி
சத்தியம் காணும் சம்மத
நாளே.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

    Continue reading