சிவமணி புவனேஸ்வரன்

சந்தம் சிந்தும் கவிக்காக
சிவமணி புவனேஸ்வரன் சுவிஸ் இல் இருந்து.

தலைப்பு : *நிச்சயதார்த்தம்*

ஒருமையாய் கூடி
ஒன்று பட்டே
இருமனதை இணைக்க
இணையும் உறவுகள்

பெருமனதாக உள்ளம் மகிழ
பருவங்கள் பார்த்து பலமும் சேர்த்து

விருந்துகள் ஆக்கி
விருப்புகள் சொல்லி
பொருந்தப் பேசும்
பொன்னான பொழுதே

தந்தை தாயை தலைமையாய் கொண்டு முந்தை பெரியார் முன்னிலை வைத்து

மங்கலப் பொருட்களை
மறுகரம் மாற்றி
திங்களும் குறித்து
தேதியும் ஆக்கி
சங்கம மாந்தர் சபையில் கூடி
நிச்சயம் ஒன்றே நிலையெனச் சொல்லி
சத்தியம் காணும் சம்மத
நாளே.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading