” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவமணி புவனேஸ்வரன்

சந்தம் சிந்தும் கவிக்காக
சிவமணி புவனேஸ்வரன் சுவிஸ் இல் இருந்து.

தலைப்பு : *நிச்சயதார்த்தம்*

ஒருமையாய் கூடி
ஒன்று பட்டே
இருமனதை இணைக்க
இணையும் உறவுகள்

பெருமனதாக உள்ளம் மகிழ
பருவங்கள் பார்த்து பலமும் சேர்த்து

விருந்துகள் ஆக்கி
விருப்புகள் சொல்லி
பொருந்தப் பேசும்
பொன்னான பொழுதே

தந்தை தாயை தலைமையாய் கொண்டு முந்தை பெரியார் முன்னிலை வைத்து

மங்கலப் பொருட்களை
மறுகரம் மாற்றி
திங்களும் குறித்து
தேதியும் ஆக்கி
சங்கம மாந்தர் சபையில் கூடி
நிச்சயம் ஒன்றே நிலையெனச் சொல்லி
சத்தியம் காணும் சம்மத
நாளே.

Nada Mohan
Author: Nada Mohan