சிவரஞ்சினி கலைச்செல்வன்

மனுநீதி தவறுகின்ற மன்னரது நாட்டில்
மண் வளமும் பொன் வளமும் மறையும் தினம் கேட்டில்
இது சரியே என்பதினினை
இலங்கை நிலை காட்டும்
இலங்கைக்கு கடன் கொடுத்த நாடு மீள கேட்க
வறுமை மிக நாடு என வங்குறோத்தை ஏற்று
வைத்ததுவே புது அரசின் சாதனையாய் பார்த்தோம்,

மோசடியை செய்ததவர்களை பதவிகளை விட்டு
முதுகில் கால் பதிய தாம்
எடுத்தார்கள் ஓட்டம்
ஆண்ட குடை கொற்றம் எல்லாம் அடியோடு வீழ
ஆள் எவரும் தேர்தலிலே வெல்லாத போதும்
தான் பிறர்கள் வாக்குகளால் எம்பியாய் ஆன
பச்சை கட்சி நரி தலைவர்
பதவியை தான் வாங்கி
மோசடியர் சண்டியர்கள் மீள தலை காட்ட
ஓட வைத்த போராளர் சிறைக்குள்ளே வட
நாடு அடைவு போ வைத்தோர்
மந்திரிகள் ஆக
நய வஞ்ச பேய்ஆட்சி
நடக்கிறது நாட்டில்.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading