” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவரஞ்சினி கலைச்செல்வன்

மனுநீதி தவறுகின்ற மன்னரது நாட்டில்
மண் வளமும் பொன் வளமும் மறையும் தினம் கேட்டில்
இது சரியே என்பதினினை
இலங்கை நிலை காட்டும்
இலங்கைக்கு கடன் கொடுத்த நாடு மீள கேட்க
வறுமை மிக நாடு என வங்குறோத்தை ஏற்று
வைத்ததுவே புது அரசின் சாதனையாய் பார்த்தோம்,

மோசடியை செய்ததவர்களை பதவிகளை விட்டு
முதுகில் கால் பதிய தாம்
எடுத்தார்கள் ஓட்டம்
ஆண்ட குடை கொற்றம் எல்லாம் அடியோடு வீழ
ஆள் எவரும் தேர்தலிலே வெல்லாத போதும்
தான் பிறர்கள் வாக்குகளால் எம்பியாய் ஆன
பச்சை கட்சி நரி தலைவர்
பதவியை தான் வாங்கி
மோசடியர் சண்டியர்கள் மீள தலை காட்ட
ஓட வைத்த போராளர் சிறைக்குள்ளே வட
நாடு அடைவு போ வைத்தோர்
மந்திரிகள் ஆக
நய வஞ்ச பேய்ஆட்சி
நடக்கிறது நாட்டில்.

Nada Mohan
Author: Nada Mohan