சிவரஞ்சினி கலைச்செல்வன்

மாவீரரே!
சந்தம் சிந்தும் சந்திப்பு
என்பத்து மூன்று முதலாக
இயக்கங்கள் எழுந்தன பலவாக
ஒன்றாய் இருந்தவர் இயக்கமென்று
ஒருவருக்குள் மோதல் யார் பெரிது என்று
பல்வேறு இயங்கம்
தொடங்கியது
பற்பல தாக்குதல்
நடத்தியது
இயக்கத்துடன் இயக்கம் மோதியது
இறுதியில் புலி மட்டும் எஞ்சியது
தரைபடை கடற்படை
அதன் அமைத்து
தரமாக வான் படை
ஒன்றமைத்து
எதிரியின் பல முனை தாக்குதலில்
இழந்தோம் விடுதலை
போர் திறனை
ஆளை ஆள் பிழை சொல்லி
ஆவதென்ன
அனைவரும் மாவீரர்
அஞ்சலிப்போம்
-சிவரஞ்சினி கலைச்செல்வன்-

Nada Mohan
Author: Nada Mohan

    சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

    Continue reading