சிவரஞ்சினி கலைச்செல்வன்

விடுமுறை
தவணைக்கு ஒருமுறை
பாடசாலை தந்தது விடுமுறை.
எந்தப் பொறுப்பும் இல்லாத காலம்.
விளையாட்டுக்களுடன் விடுதலை கழியும்
கோயில் திருவிழா
இணுவில் தியேட்டரில்
இடை இடை பக்திப்படம்
மாமா கருணையில்
யாழ் திரை அரங்கில்
அடுத்த ஊரில் சித்தப்பா வீட்டில்
இப்படியாக லீவு கழிந்த
படித்த காலம்.
வேலை என்று
சேர்ந்த போது
ஞாயிறு விடுமுறை
வாரம் ஒருமுறை
வரமாய் விடுமுறை
திருமணம் புரிந்து
பிள்ளைகள் பிறந்து
பிள்ளைகள் கடமைகள் ஒவ்வொன்றாய் செய்து
நித்திரை கொள்ளவும்
வடுமுறை இல்லா
நித்தம் வேலை.
வயோதிபம் வந்தும் விடுமுறை இல்லை
பேரர் பார்ப்பு
பிள்ளைகள் ஒவ் வொன்றின்
பிரசவம் பார்ப்பு
வாழ்வு சுழற்சியில்
வராது விடுதலை
-சிவரஞ்சினி கலைச்செல்வன –

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

    Continue reading