கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

சிவரஞ்சினி கலைச்செல்வன்

எண்ணம்
எண்ணமாய் உதித்ததை
இதயத்தில் இருத்தியே
இலக்கினை அடைந்திடும் வண்ணம்
திண்ணமாய் கொண்டிடில்
சேர்ந்திடும் வெற்றியாம்
திருக்குறள் இரு வரி செய்தி. விருப்பற்ற கல்வி
பலிக்காது
வெறுக்கின்ற வேலை
முடியாது
வேண்டாத பண்டம்
சமிக்காது
பொருந்தாத மனமுள்ள
புருடன்,பெண்டில்
திருமண முறிவே
வினையாகும் முடிவில்.
எண்ணம் என்பது மனத்தில் எழுவது
இதயத்தில் இருந்து ஊற்றாய் எழுவது.
மண்ணில் வாழும்
மற்றய உயிர் இனம்
கொண்டிரா ஒன்று
மானிட பிறவிக்கு
மட்டுமே உரிய
ஆறாம் அறிவின் அரிய பொக்கிஷம்

Nada Mohan
Author: Nada Mohan