சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

சிவருபன் சர்வேஸ்வரி

தைமகளே தரனி சிறக்கவும் வருவாயே
தளராத மனமதையும் தரவே வருவாயே

பாரெங்கும் ஒளிவீசிடவும் மகளே வருவாயே

பண்பகளும் மேலோங்கித் துலங்கிடவும் வருவாயே

இன்பமுடன் மக்களுமோ இன்னல்கள் அகன்றிடவே

இதயதீபமாய் எங்குமே விளங்கிடவும் வருவாயே

பாமுகத்தில் பூமுகங்கள் சிரித்தும் நிற்கவருவாயே

பகலொலி போல் மின்னும் பைங்கிளியேவா

பல்கலையும் துலங்கி நின்று பாரதுவும் சிறக்கட்டும்

கல்வியினால் காசினியும் கண்ணியமாய் மிளிரட்டும்

கருத்தோடு மொழிசொல்ல கருணைத் தெய்வங்களே

ஆசிர்வதியுங்கள் உங்கள் அடி பேணுவோமே

வாழ்க வாழ்க வாழியவே

கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan