சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

வலைப் பூ-

என் ஆசை மச்சான்-நீ
வலைகொண்டு வருவாயென்று-யான்
சிலையாக நிற்கின்றேன்
கலையாக நீ வந்தாய்- நானும்
காதல் வலை வீசிநின்றேன்

வேலைக்குப் போகையிலே – உனக்கு
வீண் பேச்சுத் தேவையில்லை
வலை போட்டு வந்தால்த்தான்-
சுளையாகப் பணம் வருமே

கடலலை அடிக்கிறது- அங்கே
காற்றும் பலமாய் வீசுகின்றது
நடுக்கடலுக்குப் போகவேண்டும்
நான் வாரேன் நாயகியே

என் மனமும் அலை போல
குமுறுவது புரியலையோ
வலை வீசி மீனைப்பிடி- உன்
வலைப்பூவுக்குள் என்னைப்பிடி

பாசவலை போட்டதாலே-என்
நேசவலை நீ யானாய்
மோசவலை போடாமல்- என்
மோகினியே விலகிநில்.

கலையாத என்னகத்தில் நிலையாக நிற்பாய் மச்சான்
பாலைவனமாய் நிற்கின்றேன். சோலை
வனமாய் வருவாய் மச்சாள்
வாலைக்குமரியடி கண்னே -என்னை
வளைப்பூக்குள் மடக்கிய சிறுக்கியடி

கவிஞர்
சிவரூபன் சர்வேஸ்வரி..✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️

Nada Mohan
Author: Nada Mohan