பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

வெற்றிப் பயணம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃ

வெற்றிமுரசு கொட்டுதங்கே கொண்டாட்டம் பாருதம்பி

வற்றிவிட்ட குளத்திலும் வைகைவந்து குதித்ததடா

பற்றிவிட்ட மகிழ்வினிலே மீன்களும் துள்ளுதுதம்பி

கற்றுவிட்ட போதினிலே களமாடவும் நின்றதடா

சுற்றிவிட்ட பம்பரம்போல் சக்கரமாய் சுழருதடா

இற்றவரை கஸ்டமென்றாய் இனியுமொரு சுகமேதம்பி

வீற்றிருந்தேன் அல்லிக் குளத்தருகே ஆரவாரம்கொட்டுதங்கே

தெற்குநோக்கி நின்ற தெய்வம் வடக்கிலே உதயமடா

சத்தியமாய் சொல்லிப்புட்டேன் சங்கதி தெரியுமா

வெற்றியும் எனக்குத்தான் நற்ச்சபையிலே தேர்வானேன்

முற்றிப் பழுத்ததடா முத்தமிழும் முக்கனியும்

விற்றிட முடியாத அழியாச் சொத்துமடா

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan