திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

சூரவதை
ஃஃஃஃஃஃஃ

சுழன்றடித்தது காற்று சுற்றி எரிந்தது தீபம் //
உழன்று கொண்டது மனங்கள் உருவமின்றிய காட்சி //
தளர்ந்து போனதகம் தடுமாறியது பலம் //
மலர்ந்து நின்றவுறவுகள் மடிந்துபோனதே மாயம் //
புலர்ந்து விட்டபோதிலும் வெண்புரவி ஓடவில்லை //
உலர்ந்துபோன எண்ணத்தில் ஊனம் சூழ்ந்தது பாராய் //

அசுரனையழித்து தேவரைக்காத்த வேலவன் எங்கே //
சூரவதை செய்யவும் அவன் மீண்டுவரவேண்டும் //
பாரச்சுமை கண்டே பாழும் நிலைவேண்டாம் //
வாழும் காலமதிலே வாகை சூடவேண்டும் //

வேலுமினிதே வேட்கையும் தணிவிப்பாய் தரணியிலே //
நாளுமுனை வேண்டினேன் காணுமின்பம் தருவாய் கந்தா //

சிவருபன் சர்வேஸ்வரி

🌞🌸🌺💐🌷✍✍✍✍✍

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading