நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

விடுமுறை வந்தாலே

இன்பம் கொழிக்கும் -சுகமான
இனிமை பொங்கும் -நாம்
கூடி மகிழ்வோம் என்று -ஒரு
குதூகலம் கொஞ்சம்
வீட்டில் நின்றாலே -மனம்
நிறைவு தானுமுண்டு-

விடுமுறை வந்தாலே-
இங்கு
மனம் குளிர்மையுண்டு
வேலை பளுக்கள்- அங்கு
விரைவாய் மறையும்
விருந்தினர் வருகையே- எம்
மனநிறைவைத் தரும் கொண்டாட்டம் என்று -கை
கொட்டி நிற்பார்
திண்டாட்டம் வராது -எமக்கு விடுமுறை வந்தாலே

காலை கதிரவன் கண் விழித்தால் போல்
காசினி எங்கும் இருள் நீங்கியது போல்
பவளமல்லி பூத்துக் குலுங்கியது போல்
விடுமுறை வந்தாலே கொண்டாட்டம் கொண்டாட்டம் தான்

Nada Mohan
Author: Nada Mohan