சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்
113

பசுமை

பசுமை நிறைந்த நினைவுகள்
பாடி களித்த காலங்கள்
பழகிகளித்த உடன் பிறப்புக்கள்
பிரிந்து சென்றோம்

இயற்கை அன்னையவள்
இதமாய் பூமிக்கு
பசுமை ஆடையை போர்த்தி அழகு
பார்க்கின்றாள்

சாமத்தில் சாரல் மழை பெய்து
வெப்பத்தை தணிக்குது
வெண்கதிருக்கு பன்னீர் தெளிக்குது

வியர்வையில் நனைந்து
செங்குருதி சிந்திய விவசாயி
விதம் விதமாய்
விளைவிக்கும்
கோதுமை சோளம் பசுமையின் கோலம்

கண்ணுக்கு விருந்து
உடலுக்கு உணவு
மனதுக்கு மகிழ்வு!!

வனவளத்தை பாதுகாப்போம்
பசுமையை பேணுவோம்
பசுமை உலகை
ஆள்வோம்
வெப்பத்தை தணிக்க உழைப்போம்!!

நன்றி
சிவாஜினி சிறிதரன்

Nada Mohan
Author: Nada Mohan