கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்__59
“பணி”

முதியோர் இல்லமதில்
மூத்தோரை பாதுகாத்து
முழுநிலவாய் ஒளிகொடுத்து
முளித்திருக்கும்
தாதியவள்!!

கண்ணுள் எண்ணொய் விட்டது போல்
காத்திருந்து கண்ணயராது
மருந்து மாத்திரை கொடுத்திடுவாள்

உடல் தேத்து குளிப்பாட்டி
உட்கார்ந்து தலைவாரி
உடை போட்டு அழகுபார்த்து
உணவும் ஊட்டிடுவாளே!!

காலநேரம் பார்க்காமலே
கண்ணியமென செய்தருளும்
பணி பணி
பாதுகாக்கும் மகளவளே!!

நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்

Nada Mohan
Author: Nada Mohan