கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

சிவா சிவதர்சன்

வாரம் 183
“பறவைகளின் போதனை”

வண்ண வண்ணப் பறவைகள் யாம்
வானில் உயரப் பறக்கின்றோம்
வாழ்வில் உயர்ந்து நிற்கின்றோம்
தீமைகள் வாழ்வில் புரிந்தறியோம்

தினமும் உணவு தேடி அலைந்திடுவோம்
கூடுகட்டி வாழ்ந்தாலும் குறைகளின்றி வாழ்கின்றோம்
ஆறறிவு பெற்ற மனிதன் நீ ஆசா பாசங்களில் அலைகின்றாய்
தாழ்ந்த வாழ்க்கை வாழுகின்றாய் தரையில் கிடந்து உழல்கின்றாய்

நல்லவை தீயவை பேதங்காண மறுக்கின்றாய்
இன மத மொழியென இறுமாந்து திரிகின்றாய்
எமக்கோ எம்மவர் யாவரும் ஓரினம்,பறவையினம்
மனிதா இனத்தால் ஒன்றுபடு
என்றும் உயர்வாய் வாழ்ந்திடலாம்.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading