கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

சிவா சிவதர்சன்

வாரம் 190

“மாட்சிமை தங்கிய மகாராணி”

ஆயிரம் இராணியர் அவனியில் ஆட்சி செய்ததுண்டு
அரசரோடு அணைந்து அரியாசனம் பெற்றதுண்டு
ஆனாலும் இரண்டாம் எலிசபத்திற்கு இணையான மகாராணி
எவருண்டு? அவர்போல் என்னொருவர் தோன்றுவது எளிதன்று.

ஆதவன் அஸ்தமிக்காத பிருத்தானிய சாம்ராச்சியம்
இருபத்தாறு ஆட்டையில் மணிமுடி சுமந்தது மக்கள் செய்த பெரும்பாக்கியம்
ஏழுபத்து ஆண்டுகள் செங்கோலாட்சியை போற்றி வளர்த்தவர்
பகைவரும் போற்றும் வண்ணம் ஆண்டு மறைந்தவர்

முப்பத்துநான்கு நாடுகள் அவர்கொடிகீழ் அடங்கி நின்றன
மகாராணி என்றால் இரண்டாம் எலிசபெத் என்றே நம்பி இருந்தன
மாட்சிமை தங்கிய மகாராணியும் பிருத்தானியப் பேரரசும்
வரலாறு சொல்லும் வழுவிலா பேருண்மை-மனிதகுலம்
உள்ளவரை அவர்தம் மாண்பு குன்றாது வாழ்ந்து வரும்.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் செல்லாக்காசு புவனத்தில் பலநாட்டின் நாணய மதிப்பு புழங்கிடும் பல்வேறு நாமத்தின் சிறப்பு பலநாட்டின் பணத்தால் பாரிய விரிசல் பதுக்கிய...

    Continue reading